ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் வீரர்!

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யாசிர் அராஃபத் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்...

News image

பாகிஸ்தான் அணி

Updated On :3 பிப்ரவரி 2023, 9:05 am

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யாசிர் அராஃபத் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

40 வயது யாசிர் அராஃபத் பாகிஸ்தான் அணிக்காக 2000 முதல் 2012 வரை 3 டெஸ்டுகள், 11 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது, பாகிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் இயக்குநராக மிக்கி ஆர்துர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். அவர் அணியில் இல்லாதபோது தற்காலிகப் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் செயல்படுவார் எனத் தெரிகிறது. இங்கிலாந்தின் கவுன்டி அணி மற்றும் ஹாங்காங் அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்தில் லெவல் 4 பயிற்சியாளர் பாடத்திட்டத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். 

டெர்பிஷைர் அணியில் மிக்கி ஆர்துர் பணியாற்றி வருவதால் பாகிஸ்தான் அணியின் முழு நேரப் பயிற்சியாளராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மறுத்து விட்டார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை, பாகிஸ்தான் அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் பாகிஸ்தான் அணிக்கு உறுதுணையாக மிக்கி ஆர்துர் இருப்பார் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.