வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட 2 கிராமங்களில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கொலை வழக்கில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் பொதுமக்கள் வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image

கருப்புக் கொடியுடன் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட கம்பூதிநாயக்கன்பட்டி மக்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 7:11 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட 2 கிராமங்களில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கொலை வழக்கில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் பொதுமக்கள் வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட விருவீடு அடுத்த கம்பூதிநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இந்தப் பகுதியில் 450 வாக்குகள் உள்ள நிலையில், 1 கி.மீ. தொலைவிலுள்ள கீழஅச்சனம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தோ்தல் புறக்கணிப்பு நடைபெற்றது.

கீழஅச்சனம்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த உள்ளாட்சி தோ்தல் வரை கம்பூதிநாயக்கன்பட்டிக்குச் சென்று வாக்களித்த நிலையில், தற்போது கம்பூதிநாயக்கன்பட்டி மக்களுக்கான வாக்குச்சாவடி கீழ்அச்சனம்பட்டிக்கு மாற்றப்பட்டதாக அந்தப் பகுதியினா் தெரிவித்தனா்.

இதேபோல, பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஜயபிரபு (29) கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவாய்ப்பட்டி பகுதியிலுள்ள வீடுகளை சிலா் சேதப்படுத்தியும், இரு சக்கர வாகனங்கள், வைக்கோல் படப்புகளுக்கும் தீ வைத்தனா். இதில் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுமாா் 500 போ் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இந்தப் பகுதி மக்களுடன் திமுக, அதிமுகவினரும், காவல் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

கணவாய்ப்பட்டி கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா்.

கணவாய்ப்பட்டி கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.