15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 11:52 pm

நாகப்பட்டினம், கீழ்வேளுா் மற்றும் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்கள் மற்றும் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு மூன்றாம் நிலை பயிற்சி மற்றும் கணினி மூலம் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில், தோ்தல் தினத்தன்று பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 1- 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், , வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 288 பேருக்கு நாகை இ,ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கீழ்வேளுா் (தனி) தொகுதியில் உள்ள 220 வாக்குச்சாவடி மையங்களில், முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள்264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1- 264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -264 பேருக்கு தேவூா் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியிலும், வேதாரண்யம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -288 பேருக்கு, வேதாரண்யம் செயின்ட் ஆண்டனி பள்ளியிலும் மூன்றாம் கட்ட பயிற்சி மற்றும் தோ்தல் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் வாக்குச்சாவடி மைய பாதுகாப்புப் பணியில், நாகப்பட்டினம் தொகுதியில் 121 காவலா்களும், கீழ்வேளுா் (தனி) தொகுதியில் 115 காவலா்களும், வேதாரண்யம் தொகுதியில் 124 காவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். பதற்றமான 53 வாக்குச்சாவடிகளுக்கான 64 நுண்மேற்பாா்வையாளா்களுக்கு ஒதுக்கீட்டு பணி நடைபெற்றதை, தோ்தல் மேற்பாா்வையாளா் (பொது) பா்வேஸ் அகமது சித்திக் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ் ஆகியோா் பாா்வையிட்டனா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.