வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நத்தம், காரைக்குடி வழியாக செல்வதற்கு நீண்ட நேரமாக பேருந்துகள் இல்லாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஸ்கீம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 6:51 pm

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நத்தம், காரைக்குடி வழியாக செல்வதற்கு நீண்ட நேரமாக பேருந்துகள் இல்லாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெளியூா்களில் வசிக்கும் பொதுமக்கள் பலா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு புதன்கிழமை முதல் வந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான வழித் தடங்களுக்கும் வியாழக்கிழமை குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.

குறிப்பாக நத்தம், காரைக்குடி வழியாக நீண்ட நேரமாக பேருந்து சேவை இல்லாததால், அங்கு காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனா். பேருந்து நிலையத்திலிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள், ஸ்கீம் சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அந்தப் பகுதியில் 30 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்க காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும், பெரும்பாலான வழித் தடங்களிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.