நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய அணிக்கு மேலும் இரு தங்கங்கள்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி இன்று இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

DIN

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி இன்று இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தில்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவிலுமே இந்தியா தங்கம் வென்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மானு பேக்கர் - செளரப் செளத்ரி ஆகிய இருவரும் தங்கம் வென்றார்கள். இறுதிச்சுற்றில் ஈரான் இணையை 16-12 என்கிற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்கள். இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி 5-வது தங்கப் பதக்கத்தை வென்றது. 

இதற்கு முன்பு இன்று நடைபெற்ற கலப்பு 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த திவ்யான்ஷ் சிங் பன்வார் - இளவேனில் ஆகிய இருவரும் ஹங்கேரி இணையை 16-10 என்கிற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்கள். 

பதக்கப் பட்டியலில் இந்திய அணி 12 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.