பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்திய ஏ அணி பந்துவீச்சாளர்களைச் சோர்வடைய வைத்த நியூஸி. ஏ அணி பேட்ஸ்மேன்கள்!

இந்தியா ஏ -நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது...

News image
Updated On :31 ஜனவரி 2020, 6:16 am

இந்தியா ஏ -நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் ஆட்டம், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள ஏழு பேட்ஸ்மேன்களில் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே 4 ரன்களில் வெளியேறினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஓரளவு நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். எனினும் 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஏ அணி அதற்குப் பிறகு தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சேப்மேனும் விக்கெட் கீப்பர் கிளவரும் நன்கு விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்தார்கள். 2-ம் நாளின் கடைசி வரை இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் போனது. சேப்மேன் 85 ரன்களும் கிளவர் 111 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.