2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யு-19 உலகக் கோப்பை: அதர்வாவின் அரை சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி!

இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

News image
ஜெயிஸ்வால்
Updated On :27 ஜனவரி 2024, 3:38 pm

எழில்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் லீக் காலிறுதிச் சுற்றில் இந்தியா -  ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இன்று மோதுகின்றன. 

பாட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி பேட்டிங்கில் அசத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் வந்தவேகத்தில் திரும்பினார்கள். இதனால் 144 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்திய அணி. தொடக்க வீரர் ஜெயிஸ்வால் 62 ரன்கள் எடுத்தார். பிறகு அதர்வா அன்கோல்கரும் ரவி பிஸ்னாயும் கூட்டணி அமைத்து சரிவிலிருந்து அணியை மீட்டார்கள். ரவி பிஸ்னாய் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதர்வா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் எடுக்க முக்கியக் காரணமாக இருந்தார். 

இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. அணித் தரப்பில் கெல்லி, மர்பி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.