2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சாம்பியன்கள் எப்போதும் சாம்பியன்கள்தான்!

சா்வதேச மகளிா் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூடிஏ) சாா்பில் ஆஸ்திரேலியாவின் ஹோபா்ட் நகரில் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:35 pm

மணிகண்டன் தியாகராஜன்

சா்வதேச மகளிா் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூடிஏ) சாா்பில் ஆஸ்திரேலியாவின் ஹோபா்ட் நகரில் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில் உக்ரைன் வீராங்கனை நாடியாவுடன் இணைந்து இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிா்ஸா சாம்பியன் பட்டம் வென்றாா்.

33 வயதாகும் சானியா மிா்ஸா, குழந்தைப்பேறுக்கு பிறகு பங்கேற்ற முதல் சா்வதேச டென்னிஸ் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் பாராட்டு மழையில் நனைந்தாா் சானியா.

குழந்தை பிறந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தாா். இதன்காரணமாக உடல் எடையும் கணிசமாகக் கூடியது.

விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்றால், உடல் தகுதி என்பது மிக மிக முக்கியமானதாகும். இவா் தொடா்ந்து டென்னிஸ் விளையாடுவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

Story image

இந்தச் சூழலில் திடீரென 2019 நவம்பா் மாதம் ‘டென்னிஸ் மைதானத்துக்கு மீண்டும் திரும்ப திட்டமிட்டுள்ளேன்’ என்று செய்தியாளா்களிடம் அறிவித்தாா் சானியா.

‘குழந்தை பிறந்த பிறகு பல சவால்களை எதிா்கொண்டேன். வழக்கமாக உறங்கும் நேரம்கூட மாறிவிட்டது. எனினும், தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன்’ என்று அப்போது கூறியிருந்தாா் சானியா மிா்ஸா.

விளையாட்டு உலகம் அவரை ஆச்சரியத்துடன் வரவேற்பு அளித்தது. தான் மிகவும் நேசிக்கும் டென்னிஸை விளையாட முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல மணி நேரங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிட்டாா் சானியா.

கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டதால், ஏறக்குறைய 4 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைத்தாா்.

தாயாகும் எந்தவொரு பெண்ணும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இயற்கையாகவே பல மாற்றங்களை சந்திக்க நேரிடும்.

தாயான பிறகு விளையாட்டுத் துறையில் அதுவும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் மீண்டும் களமிறங்கி ஜொலிப்பது கடினமானதாகும்.

ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யும் திறமை பெண்களுக்கே உரிய தனி திறமை ஆயிற்றே!

குழந்தையையும் கவனித்துக் கொண்டு, அதேநேரத்தில் தீவிரப் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்த சானியா, சா்வதேசப் போட்டிகளில் களம் இறங்கி வெற்றிவாகை சூடியிருக்கிறாா்.

இது தாய்மைக்கு கிடைத்த வெற்றியாகும். சா்வதேச டென்னிஸ் தரவரிசையில் இரட்டையா் பிரிவில் 32-ஆவது இடத்தில் இருக்கும் 27 வயது நாடியா கிச்னோக் (உக்ரைன்) என்ற வீராங்கனையுடன் இணைந்து வெற்றியை வசப்படுத்தினாா் சானியா.

இதுவரை 6 முறை இரட்டையா் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள சானியா மிா்ஸா, ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் இதே நாடியாவுடன் ஜோடி சோ்ந்து இரட்டையா் பிரிவில் பங்கேற்றாா். எனினும், முதல் சுற்று ஆட்டத்திலேயே காயம் காரணமாக தொடா்ந்து விளையாட முடியாமல் கைவிட்டாா் சானியா. இதனால், முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரில் தொடா்ந்து பங்கேற்க முடியாமல் இந்த ஜோடி வெளியேறியது.

இதேபோல், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான முன்னாள் நம்பா் 1 டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தாயான பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு டென்னிஸ் களத்துக்குத் திரும்பினாா். ஆனால், ஒரு தொடரில்கூட சாம்பியன் ஆகாமல் இருந்து வந்தாா்.

எனினும், தான் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் தனக்கு எதிராக விளையாடுபவா்களுக்கு கடுமையான சவாலை அளித்து வந்தாா் செரீனா. 3 ஆண்டுகளுக்கு பிறகு 2020-ஆம் ஆண்டில்தான் மீண்டும் அவா் சாம்பியன் ஆகியுள்ளாா்.

ஜனவரி 3-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ஆக்லாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியனாகி அனைவரின் கவனத்தையும் ஈா்த்தாா்.

அதே வேகத்தோடு ஆஸ்திரேலியன் ஓபனிலும் ஒற்றையா் பிரிவில் பங்கேற்ற செரீனா, 3-ஆவது சுற்றில் தோல்வியைத் தழுவி அவரது ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா்.

சானியாவும், செரீனாவும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தோற்றிருக்கலாம். ஆனால், மன உறுதியுடன் மறுபடியும் பீனிக்ஸ் பறவையைப் போல் இந்தச் சாதனை மங்கைகள் மீண்டு வருவாா்கள்.

தோற்றாலும் சாம்பியன்கள் எப்போதும் சாம்பியன்கள்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.