பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட்டும் எடுக்காததால், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்த பும்ரா!

நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட், இரண்டாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 8:56 am

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியப் பந்துவீச்சாளர் பும்ரா இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் அதிர்ச்சியளித்த பும்ரா, தொடருக்கு முன்பு பந்துவீச்சாளருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் 3 ஆட்டங்களில் விளையாடியும் ஒரு விக்கெட்டும் எடுக்காததால் 45 புள்ளிகளை இழந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளார்.

நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட், இரண்டாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. 2-ம் இடத்தில் பும்ராவும் 13-ம் இடத்தில் சஹாலும் உள்ளார்கள்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி, முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஒருநாள் தொடரில் பங்கேற்காத ரோஹித் சர்மா, 2-ம் இடத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.