பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆஸ்திரேலிய ஓபன்: மகளிா் ஒற்றையா் பட்டத்தை வென்றார் சோபியா கெனின்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பட்டத்தை 21 வயது சோபியா கெனின் வென்றுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2020, 11:16 am

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பட்டத்தை 21 வயது சோபியா கெனின் வென்றுள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. 

இறுதிச் சுற்றில் முகுருஸா-சோபியா கெனின் ஆகியோா் மோதினார்கள். தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கெனினை 6-4 என முதல் செட்டில் வென்றார் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள முகுருஸா. ஆனால், அடுத்த இரு செட்களிலும் தனது குறைகளைச் சரிசெய்து, 4-6, 6-2, 6-2 என இறுதிச்சுற்றை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சோபியா கெனின். 

ஆஸி. ஓபன் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் செரீனா, மடிஸன் கீய்ஸ் ஆகியோா் வெளியேறிய நிலையில், கடைசி வீராங்கனையாக நிலைத்து நின்ற சோபியா கெனின், சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பங்கேற்ற முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று தன் திறமையை நிரூபித்துள்ளார். 

2016-ல் பிரெஞ்சு ஓபன், 2017-ல் விம்பிள்டன் பட்டங்களை வென்றவா் 26 வயது முகுருஸா. உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனை. முகுருஸா நீண்ட காலமாக கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. ஆஸி. ஓபன் போட்டிக்கு கூட தரவரிசையில் இல்லாத வீராங்கனையாக பங்கேற்றாா். இந்த நிலையில் அவர் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.