மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பயிற்சி ஆட்டம்: சதமடித்த தென் ஆப்பிரிக்க வீரர்!

2-ம் நாள் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது...

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 12:24 pm

ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, அக்டோபர் 2-ம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. அதற்கு முன்பு, தென் ஆப்பிரிக்கா - ரோஹித் சர்மா தலைமையிலான போர்டு பிரசிடென்ட் லெவன் ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் விஜயநகரத்தில் நேற்று தொடங்கியது.

நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்புக்கு ஆளானது. மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீச முடியாமல் போனது. இதனால் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மழை இன்றும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் 50 ஓவர்கள் வரை வீசமுடிந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 2-ம் நாள் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் எயிடன் மார்க்ரம் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டார். பவுமா 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். பிரசிடென்ட் லெவன் அணியைச் சேர்ந்த டிஏ ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.