மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் தீபக் புனியா!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தீபக் புனியா.

News image

தீபக் புனியா (United World Wrestling/Twitter)

Updated On :21 செப்டம்பர் 2019, 11:37 am

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தீபக் புனியா. இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் அவர் தகுதியடைந்துள்ளார்.

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 61 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ராகுல் அவரே கஸகஸ்தானின் ரஸ்ஸுல் லலியேவை எதிர்கொண்டார். இதில் 10-7 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் ராகுல். அரையிறுதிக்கு அவர் தகுதி பெற்றாலும் 61 கிலோ எடைப் பிரிவு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இல்லை. இதனால் பதக்கம் பெறுவதற்கான ஒரே குறிக்கோளுடன் அரையிறுதியில் ஜார்ஜியாவின் பெகோவை எதிர்கொண்டார். ராகுல் கடுமையாகப் போராடியும் 10-6 என்கிற புள்ளிக்கணக்கில் ஜார்ஜியா வீரர் வென்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துனான போட்டியில் ராகுல் போட்டியிடவுள்ளார். 

86 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிச் சுற்றில், இந்தியாவின் தீபக் புனியா, கொலம்பியாவின் கார்லோஸ் மெண்டஸை 7-6 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். இந்தப் போட்டியின் மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறும் 4-வது இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். இதற்கு முன்பு வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா ஆகியோர் தகுதி பெற்றார்கள்.

அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீபனை எதிர்கொண்டார் 20 வயது தீபக் புனியா. ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய புனியா, 8-2 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.