/

தோனியும் ரோஹித் சர்மாவும் அணியில் இருப்பதால் தான் கோலியால் வெற்றிகரமான கேப்டனாக இருக்க முடிகிறது: கம்பீர்

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என... 

News image
Updated On :21 செப்டம்பர் 2019, 9:26 am

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் கம்பீர் கூறியதாவது:

ஒரு கேப்டனாக இன்னும் கோலி நீண்டதூரம் செல்லவேண்டும். உலகக் கோப்பை அவருக்கு நல்லவிதமாக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அவரால் வெற்றிகரமான கேப்டனாக இருக்கமுடிவதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான். 

ஐபிஎல் போன்ற போட்டிகளில் உங்களுடைய தலைமைப்பண்பு சோதிக்கப்படும். ஏனெனில் அப்போதுதான் இதர வீரர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். நான் மிகவும் உண்மையாக இருக்கிறேன், இதைச் சொல்லும்போது. மும்பை இந்தியன்ஸுக்காக ரோஹித் சர்மாவும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக தோனியும் சாதித்துள்ளதைப் பாருங்கள். அத்துடன் ஆர்சியின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.