/

இந்திய ஏ அணி வெற்றி: ஆட்ட நாயகனான ஆல்ரவுண்டர்!

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 7:28 am

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 164 ரன்களுக்குச் சுருண்டது. ஷர்துல் தாக்குரும் கே. கெளதமும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 87.5 ஓவர்களில் 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் 90 ரன்களும் ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்‌ஷேனா 61 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் என்ஜிடி, டேன் பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தென் ஆப்பிரிக்க  ஏ அணி, 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி, 58.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய ஏ தரப்பில் நதீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு இந்திய ஏ அணி வெற்றி பெற 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை இந்திய ஏ அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்ட நாயகனாக ஜலஜ் சக்‌ஷேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.