தியோதர் கோப்பை: ருதுராஜ் கெயிக்வாட் 113, பாபா அபராஜித் 101 ரன்கள் எடுத்து அசத்தல்!
25 வயது பாபா 101 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


ராஞ்சியில் நடைபெற்று வரும் தியோதர் கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா ஏ தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 122 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்தார். அவருக்கு நல்ல இணையாக விளங்கிய பாபா அபராஜித்தும் பிறகு சதமடித்து அசத்தினார். 25 வயது பாபா 101 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா பி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. இந்திய ஏ அணித் தரப்பில் உனாட்கட், ஆர். அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆர். அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...