பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

இரட்டை ஆதாயப் பதவி விவகாரம்: நவம்பர் 12-ல் ஆஜராக டிராவிட்டுக்கு நோட்டீஸ்!

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட நாள் விடுப்பில் உள்ளேன். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என...

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:35 am

எழில்

இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12 அன்று நேரில் ஆஜராகுமாறு முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநருமான ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ நெறிமுறைகள் அலுவலர் டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார். 

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ராகுல் டிராவிட் துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் அவரை பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமித்தது. இது இரட்டை ஆதாயப் பதவி வகிப்பதாகும் என மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் செய்தார். புதிய பிசிசிஐ சட்டவரையறையின்படி ஒருவர் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும், இல்லையென்றால் அது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வரம்பில் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக எழுத்துபூர்வமாகப் பதில் தருமாறு டிராவிட்டுக்கு பிசிசிஐ நெறிமுறைகள் அலுவலர் டி.கே. ஜெயின் அறிவுறுத்தியிருந்தார். இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக செப். 26-ல் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட நாள் விடுப்பில் உள்ளேன். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என டிராவிட் தனது பதிலில் கூறியிருந்தார். இந்நிலையில் இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12 அன்று நேரில் ஆஜராகுமாறு டிராவிட்டுக்கு டி.கே.ஜெயின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.