மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மற்றொரு ஸ்டோக்ஸ் சர்ச்சை: விளக்கம் அளித்த மனைவி!

ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவி கிளாரேவுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தன் மனைவியை ஸ்டோக்ஸ் அடித்ததாகவும்...

News image
Updated On :9 அக்டோபர் 2019, 6:16 am

விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்று வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஸ்டோக்ஸின் மனைவி.

கடந்த வாரம் லண்டனில் பிசிஏ விருதுகள் வழங்கும் விழாவில் மனைவியுடன் கலந்துகொண்டார் பென் ஸ்டோக்ஸ். சிறந்த வீரர் என்கிற விருது ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவி கிளாரேவுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தன் மனைவியை ஸ்டோக்ஸ் அடித்ததாகவும் கிளாரேவின் தொண்டையில் கையை வைத்து தள்ளியதாகவும் செய்தி ஒன்று வெளியானது. 

செய்தி வெளியான உடனே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் கிளாரே. இவ்வளவு மோசமான கதை ஒன்று உருவாக்குவார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஒருவருக்கொருவர் முகத்தில் கையை வைத்து விளையாடினோம். அப்படித்தான் நாங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம். இதிலிருந்து ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள். இதன்பிறகு மெக்டொனால்ட்ஸில் 20 நிமிடங்கள் செலவழித்தோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.