மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

எந்த பிட்சிலும் நன்கு விளையாடுவோம்: இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் நம்பிக்கை!

எங்களுக்குக் கிடைக்கும் ஆடுகளங்கள் நாங்கள் கேட்டுப் பெற்றதல்ல. நெ.1 அணியாக இருக்கவேண்டும் என்றால்...

News image
Updated On :8 அக்டோபர் 2019, 12:27 pm

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் புணேவில் வியாழன் முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் நமது பந்துவீச்சாளர்கள் மிகத்திறமையானவர்கள். அதனால்தான் அவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கின்றன. பேட்டிங்குக்குச் சாதகமாக உள்ள உள்ளூர் ஆடுகளங்களில் விளையாடி, நமது பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் திறமையை வளர்த்துக்கொண்டுள்ளார்கள். சிறந்த பந்துவீச்சாளராக இருக்க வேண்டுமென்றால் ரிவர்ஸ் ஸ்விங்கில் வல்லவராக இருக்கவேண்டும். அதில்தான் நம்முடைய உள்ளூர் போட்டிகள் பங்கு வகிக்கின்றன. 

எங்களுக்குக் கிடைக்கும் ஆடுகளங்கள் நாங்கள் கேட்டுப் பெற்றதல்ல. நெ.1 அணியாக இருக்கவேண்டும் என்றால் எங்களுக்குத் தரப்படும் எவ்விதமான ஆடுகளங்களிலும் நன்றாக விளையாடவேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு உள்ளது. வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஆடுகளங்களை அபூர்வமாகத்தான் கவனிப்போம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.