மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேகேஆர் ஐபிஎல் அணியில் இணைந்த இரு முன்னாள் வீரர்கள்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2019, 10:20 am

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் கைல் மில்ஸ், பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இருவரும் கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கலமுடன் இணைந்து பணியாற்றுவார்கள். டேவிட் ஹஸ்ஸி, கேகேஆர் அணியில் 2008-10 காலக்கட்டங்களில் விளையாடியுள்ளார். மில்ஸ், நியூஸிலாந்து அணிக்காக 19 டெஸ்டுகள், 170 ஒருநாள், 42 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கேகேஆர் அணி. பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது. எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் பிளேஆஃப் ஆட்டங்களில் தகுதி பெறாமல் போய்விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.