ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முரளி விஜய் அபார சதம்: 5-வது வெற்றியை அடைந்தது தமிழ்நாடு அணி!

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் முரளி விஜய்யின் அபார சதத்தால் தமிழக அணி 5-வது வெற்றியை அடைந்துள்ளது... 

News image
Updated On :1 நவம்பர் 2019, 8:04 am

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் முரளி விஜய்யின் அபார சதத்தால் தமிழக அணி 5-வது வெற்றியை அடைந்துள்ளது. 

தமிழ்நாடு - ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இக்பால் 67 ரன்களும் சுபம் சிங் 66 ரன்களும் அப்துல் சமத் 50 ரன்களும் எடுத்தார்கள். தமிழக அணியில் நடராஜன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்தமுறையும் தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். முரளி விஜய் 131 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். பாபா அபரஜித் 107 பந்துகளில் 86 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி, 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து குரூப் சி பிரிவில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.