ஐபிஎல்-லில் கூடுதலாக அணிகளைச் சேர்ப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. எனினும் அடுத்த வருடம் கூடுதலாக மூன்று நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் அதன் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. லக்னோ, குவஹாட்டி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களிலும் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கள் அணிக்கான ஆட்டங்கள் சிலவற்றை லக்னோவில் நடத்திக்கொள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல அஹமதாபாத்துக்குப் பதிலாக குவஹாட்டியில் சில ஆட்டங்களை நடத்திக்கொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விருப்பம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் இருப்பதால் அங்கும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்தலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


