ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாற்றம் ஏற்படுத்திய கெதர் ஜாதவ் ஆட்டம்: தியோதர் கோப்பை இறுதிச்சுற்றில் 283 ரன்கள் எடுத்த இந்தியா பி அணி!

கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய கெளதம் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 

News image
Updated On :4 நவம்பர் 2019, 9:24 am

உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 52 ரன்கள் எடுத்தார் கெதர் ஜாதவ். அதற்குப் பிறகு அவர் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியும் பெரிதாக எதுவும் ரன்கள் எடுக்க முடியவில்லை. விஜய் ஹசாரே போட்டியிலும் ஒரு அரை சதமும் எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் அவரைக் கிட்டத்தட்ட மறந்தே போன நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையிலான தியோதர் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா பி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் - கெதர் ஜாதவ். மூன்று முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் நிதிஷ் ராணாவுடன் இணைந்து அருமையாகக் கூட்டணியை அமைத்தார் கெதர் ஜாதவ். ஒரு கட்டத்தில் 25-வது ஓவர்களின்போது 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா பி அணி. ஆனால் ஆட்டத்தின் போக்கைத் தன்னுடைய அருமையான ஆட்டத்தின் மூலம் மாற்றினார் கெதர் ஜாதவ். 94 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் ஜெயிஸ்வால் 79 பந்துகளில் 54 ரன்களும் விஜய் சங்கர் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்கள். கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய கெளதம் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 

இந்தியா பி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா சி அணித் தரப்பில் 21 வயது இஷான் போரெல் அற்புதமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.