ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தியோதர் கோப்பை: அதிரடியாக விளையாடி 98 ரன்கள் எடுத்த அக்‌ஷர் படேல்

தியோதர் கோப்பைக்கான கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் இன்று விளையாடி வருகின்றன.

News image
Updated On :2 நவம்பர் 2019, 7:34 am

தியோதர் கோப்பைக்கான கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் இன்று விளையாடி வருகின்றன.

ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இரு பேட்ஸ்மேன்கள் தவிர மற்ற மேல்வரிசை, நடுவரிசை வீரர்களால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. விராட் சிங் 76 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 32-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 34 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்தியா சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துத் தடுமாற்றத்துடன் இருந்தது. அதன்பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்துத் தன்னுடைய அணிக்குக் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். 61 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் 3 ரன்கள் எடுத்தால் சதமெடுக்கலாம் என்கிற நிலையில் அவரால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தியா சி அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.