ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டன்களாக தோனி, கோலி தேர்வு!

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா... 

News image
Updated On :24 டிசம்பர் 2019, 5:47 am

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

இரு அணிகளின் கேப்டன்களாக இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். டெஸ்ட் அணிக்கு விராட் கோலியும் ஒருநாள் அணிக்கு தோனியும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஒருநாள் அணியில் தோனி, ரோஹித் சர்மா, கோலி ஆகிய மூன்று இந்திய வீரர்களும் டெஸ்ட் அணியில் கோலியும் இடம்பெற்றுள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதித்துள்ள வீரர்களைக் கெளரவப்படுத்தும் விதமாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள் அணி: ரோஹித் சர்மா, ஆம்லா, விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன், ஜாஸ் பட்லர், தோனி (கேப்டன்), ரஷித் கான், ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மலிங்கா.

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி: அலாஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, டி வில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெயின், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.