ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

2019-ல் அதிக ஒருநாள் ரன்கள்: கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ரோஹித் சர்மா

2019-ம் ஆண்டு இந்திய அணிக்கும் கோலிக்கும் மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவுக்கும் அற்புதமாக அமைந்துவிட்டது...

News image
Updated On :23 டிசம்பர் 2019, 9:40 am

2019-ம் ஆண்டு இந்திய அணிக்கும் கோலிக்கும் மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவுக்கும் அற்புதமாக அமைந்துவிட்டது.

இந்த வருடம் விளையாடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் 1490 ரன்கள் எடுத்து, 2019-ல் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா. 26 ஆட்டங்களில் 1377 ரன்கள் எடுத்த கோலிக்கு 2-ம் இடமும் 28 ஆட்டங்களில் 1345 ரன்கள் எடுத்த மே.இ. தீவுகளின் பூரான் 3-ம் இடமும் கிடைத்துள்ளன.

மேலும் தொடர்ச்சியாக 7-வது வருடமாக, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

2013: ரோஹித் சர்மா (209)
2014: ரோஹித் சர்மா (264)
2015: ரோஹித் சர்மா (150)
2016: ரோஹித் சர்மா (171*)
2017: ரோஹித் சர்மா (208*)
2018: ரோஹித் சர்மா (162)
2019: ரோஹித் சர்மா (159)

2019 உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் அடித்து சாதனை நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. 2019-ல் மட்டுமல்ல, அடுத்த வருடமும் இதுபோல சிறப்பாக விளையாடுவேன் என்று அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.