சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

என் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: ஜடேஜா

இந்த வருடம் நிறைய ஒருநாள் ஆட்டங்களில் நான் விளையாடவில்லை. அதேசமயம்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

எழில்

இந்த வருடம் இந்திய அணி விளையாடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் 15-ல் மட்டுமே விளையாடியுள்ளார் ஜடேஜா. எனினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நேற்றைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 39 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். 

கட்டக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒரு நாள் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் கோலி, ரோஹித், ராகுல், ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா். முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 315/5 ரன்களையும், பின்னா் ஆடிய இந்திய அணி 316/6 ரன்களையும் குவித்தன. ஆட்ட நாயகன் விருது கோலிக்கும் தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் ஜடேஜா பேட்டியளித்ததாவது:

ஒருநாள் கிரிக்கெட்டிலும் என்னால் திறமையை வெளிப்படுத்த முடியும் என எனக்கு நானே நிரூபிக்க விரும்பினேன். யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. எனக்கு நானே நிரூபிக்க வேண்டும். அவ்வளவுதான். 

இந்த வருடம் நிறைய ஒருநாள் ஆட்டங்களில் நான் விளையாடவில்லை. அதேசமயம் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் திறமையை நிரூபித்துள்ளேன். நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது ஆடுகளம். கடைசிவரை விளையாடவேண்டும் என உறுதியாக இருந்தார் கோலி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவர் என்னிடம் இயல்பான ஆட்டத்தை விளையாடச் சொன்னார். அதிரடியாக விளையாட முயலாமல் நிதானமாக விளையாட அறிவுரை வழங்கினார். கடைசிப் பந்து வரை விளையாடுவதே திட்டமாக இருந்தது என்று பேட்டியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.