நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார்: உறுதியளிக்கும் பிரபல சிஎஸ்கே வீரர்!

நிச்சயமாக விளையாடுவார் என்று உறுதியளிக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ...

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:32 pm

எழில்

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடுவாரா? இந்திய ரசிகர்களிடையே உள்ள முக்கியமான கேள்வி இதுதான்.

நிச்சயமாக விளையாடுவார் என்று உறுதியளிக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தோனி ஒருபோதும் ஓய்வு பெறவில்லை. எனவே அவர் டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவார். கிரிக்கெட்டுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் தன்னைப் பாதிக்கும்படி நடந்துகொள்ள மாட்டார். எங்களுக்கும் அதையே கற்றுக்கொடுத்துள்ளார். தடுமாற்றமடையாமல் நம் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பார் என்று பேட்டியளித்துள்ளார்.

அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டுவைன் பிராவோ. 2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார் பிராவோ. அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளதாவது: மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர முடிவெடுத்துள்ளேன். பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கேப்டன் கிரோன் பொலார்ட் ஆகியோரால் மீண்டும் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். என்னைத் தேர்வு செய்தபிறகு மே.இ. தீவுகளின் டி20 அணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.