மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பறந்த ஸ்டம்புகள்: பும்ராவின் அசத்தல் பந்துவீச்சின் விடியோ!

இரு இன்னிங்ஸிலும் பிரமாதமாக விளையாடிய ரஹானே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2019, 9:41 am

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 அணிகளும் ஆடி வருகின்றன. முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்களுக்கும், மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. இதன் தொடர்ச்சியாக இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 343/7 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 102, விஹாரி 92, கோலி 51 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. தரப்பில் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

419 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. 50 ரன்கள் எடுப்பதற்குள் 50 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரோச்சும் கம்மின்ஸும் 50 ரன்கள் சேர்த்த நிலையில் 26.5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி, முதல் டெஸ்டை 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு இன்னிங்ஸிலும் பிரமாதமாக விளையாடிய ரஹானே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 2-வது டெஸ்ட், வரும் 30 அன்று கிங்ஸ்டனில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.