மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

யு.எஸ். ஓபன் முதல் சுற்றில் ஃபெடரரை எதிர்கொள்ளும் இந்திய வீரர்!

1998-க்குப் பிறகு இரு இந்தியர்கள் யு.எஸ். ஓபன் முதல் சுற்றில் விளையாடவுள்ளார். பிரஜ்னேஷ் மற்றும் சுமித் நாகல்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2019, 5:44 am

ஃபெடரருக்கு எதிராக விளையாடிக் கவனம் பெற வேண்டும், அந்தத் தனி அனுபவத்தைப் பெறவேண்டும் என்பது எல்லா டென்னிஸ் வீரர்களுக்குமான கனவாக இருக்கும். அந்தக் கனவு இந்திய வீரர் சுமித் நாகலுக்கு திங்கள் அன்று நிறைவேறப்போகிறது. 

1998-க்குப் பிறகு இரு இந்தியர்கள் யு.எஸ். ஓபன் முதல் சுற்றில் விளையாடவுள்ளார். பிரஜ்னேஷ் மற்றும் சுமித் நாகல்.

தகுதிச்சுற்றில் பிரேஸிலைச் சேர்ந்த மெனேசெஸை 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் 22 வயது சுமித் நாகல். இதன்மூலம் கடந்த 25 வருடங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தகுதி பெற்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

திங்கள் முதல் தொடங்கவுள்ள யு.எஸ் ஓபன் போட்டியின் முதல் சுற்றில் 20 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரருடன் மோதவுள்ளார் சுமித் நாகல். 

ஃபெடரருக்கு எதிராக விளையாடிக் கவனம் பெறுவார், தனி அனுபவமும் பெறுவார் நாகல். அதேசமயம் யாரும் எதிர்பாராதவிதமாக அவரை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடிப்பாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.