மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

பாகிஸ்தான் தொடர் குறித்து இந்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும்: பிசிசிஐ

பாகிஸ்தானுடனான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும் என பிசிசிஐதிங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:09 pm

Raghavendran

பாகிஸ்தானுடனான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும் என பிசிசிஐ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நடைபெறவில்லை. அதுபோல இந்திய அரசின் அனுமதியின்றி பாகிஸ்தானுடன் எந்தப் போட்டித் தொடரிலும் பங்கேற்க இயலாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இதனிடையே 2014-ல் ஏற்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நஷ்டஈடாக 70 மில்லியன் டாலர்கள் கேட்டுள்ளது. இதில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐசிசி) தலையீட்டுக்கு முன்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக இந்திய அரசுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

இந்திய அரசுக்கு பிசிசிஐ எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் இந்திய அணி பங்கேற்பது தொடர்பாக மத்திய அரசு தன் நிலைப்பாடு குறித்து விரிவாகத் தெரிவித்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிசிசிஐ-க்கு வசதியாக இருக்கும் என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.