2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அஜிங்க்ய 'ஜென்டில்மேன்' ரஹானே

ரஹானேவின் இந்தச் செயல் கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமின்றி பலரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூகவலைதளங்களிலும் இச்செயல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:57 pm

Raghavendran

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வியாழக்கிழமை தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்தப் போட்டியும் நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக 2-ஆம் நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளது.

இந்நிலையில், பரிசு வழங்கும் நிகழ்வில் இப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இதை இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே பெற்றுக்கொண்டார். பின்னர் அந்தக் கோப்பையுடன் அணி வீரர்கள் திரண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Story image

அப்போது அஜிங்க்ய ரஹானே செய்த காரியம் அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது. இந்திய அணி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட அடுத்த நொடி, அங்கே நின்றிருந்த ஆப்கானிஸ்தான் வீரர்களையும் அங்கு அழைத்து வந்த ரஹானே, இந்திய அணியினருடன் இணைந்து கோப்பையுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் களம்கண்டதை ஊக்கமளிக்கும் வகையில் ரஹானேவின் இந்தச் செயல் கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமின்றி பலரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் இச்செயல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.