2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அதிக வயதில் முதலிடம் பிடிக்க அரிய வாய்ப்பு!

டென்னிஸ் வரலாற்றில் அதிக வயதில் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அரிய வாய்ப்பு ரோஜர் ஃபெடரருக்கு அமைந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:12 pm

Raghavendran

டென்னிஸ் உலகின் மன்னனாக வலம் வருகிறார் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் (வயது 36). இவர் தற்போது நெதர்லாந்தில் நடைபெறவுள்ள ரோட்டர்டாம் ஏடிபி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அதிக வயதில் முதலிடம் பிடித்த டென்னிஸ் வீரர் என்ற புதிய சாதனையைப் படைப்பார்.

தற்போது ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருக்கும் ஃபெடரர், முதலிடத்தில் உள்ள ரஃபேல் நடாலை விட 155 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். எனவே இந்த தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் 180 புள்ளிகளைப் பெறுவார். இதனால் சுலபமாக முதலிடத்துக்கு முன்னேற முடியும்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபனில் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர், அதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்று சாதனைப் படைத்தார். கடைசியாக 2015-ல் இந்த ரோட்டர்டாம் ஏடிபி தொடரில் ஃபெடரர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோஜர் ஃபெடரரின் வரவுக்கு இந்த ஏடிபி தொடரின் ஒருங்கிணைப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காயம் காரணமாக நடால் பங்கேற்காத நிலையில், ஃபெடரர் சம்மதம் தெரிவித்தது இந்த தொடருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றார்.

கடந்த 1999-ம் ஆண்டில் முதன்முறையாக ரோட்டர்டாம் தொடரில் பங்கேற்றதன் மூலம் ஒரு சர்வதேச ஏடிபி தொடரில் விளையாடிய சிறப்பை நான் இங்கு பெற்றேன் என ரோஜர் ஃபெடரர் இந்த தொடர் குறித்து நினைவுகூர்ந்தார்.

தற்போது 36 வயதாகும் ஃபெடரர், இதில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதன் மூலம் அதிக வயதில் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் என்கிற சாதனைக்கு ரோஜர் ஃபெடரர் சொந்தக்காரர் ஆவார். முன்னதாக, அமெரிக்க வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸி 33 வயது 131 நாட்கள் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்ததே இதுவரை சாதனையாக உள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.