தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஐபிஎல் 2019: ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்!

இளம் தமிழக வீரர் ரூ. 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:55 pm

Raghavendran

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் இளம் தமிழக வீரர் ரூ. 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூர் தொடர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை குவித்து வருகிறார்.

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் ரூ.20 லட்சம் மட்டுமே அடிப்படை விலையாகக் கொண்டிருந்த வருண் சக்ரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  ரூ. 8.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி இந்திய வீரர் அஸ்வின், பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும். அஸ்வின் அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமையும். நான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.