/

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கமுடியுமா?: பாண்டியா பதில்!

யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கக்கூடியவர் என்று உங்களைச் சொல்லலாம். அதைப் பற்றி...

News image
Updated On :31 ஜூலை 2017, 9:59 am


இலங்கை காலே நகரில் கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் போட்டியிட்டன. இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா அறிமுக வீரராக களமிறங்கினார். 

இந்நிலையில், பிசிசிஐ இணையத்தளத்துக்காக ஹார்திக் பாண்டியாவை புஜாரா பேட்டி கண்டார். அப்போது புஜாரா கேட்ட கேள்விகளுக்கு பாண்டியா அளித்த பதில்கள்.

புஜாரா: யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கக்கூடியவர் என்று உங்களைச் சொல்லலாம். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாண்டியா: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடிப்பது குறித்து நான் யோசிக்கமாட்டேன். அணிக்கு என்ன தேவையோ அதைப் பற்றியே சிந்திப்பேன். 

புஜாரா: பிடித்த ஆல்ரவுண்டர்:

பாண்டியா: பலமுறை சொல்லியிருக்கிறேன். ஜாக் காலிஸ். தென் ஆப்பிரிக்க அணிக்காக அவர் செய்தவை எல்லாம் ஆச்சர்யமானவை. 

புஜாரா: கிரிக்கெட் தவிர வேறென்ன பிடிக்கும்?

பாண்டியா: கார்களும் பாப் கார்ன்களும் பிடிக்கும். சீஸ் பாப்கார்னுக்காகவே நான் படங்கள் பார்ப்பேன். ஏனெனில் அவற்றை வேறெங்கும் வாங்கமுடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.