மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிசிசிஐ கூட்டங்களில் என். சீனிவாசன் பங்கேற்கத் தடை!

பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர்...

News image
Updated On :24 ஜூலை 2017, 11:10 am

பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் பிசிசிஐ கூட்டங்களில் பங்கேறகக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மாநில கிரிக்கெட் சங்கங்களின் பிரதிநிதிகளாக பிசிசிஐ கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

பிசிசிஐயில் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து 4-ஆவது இடைக்கால அறிக்கையை பிசிசிஐ நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களான என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்துக்காக பிசிசிஐயில் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தவிடாமல் தடையாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக பிசிசிஐ கூட்டங்களில் எப்படி பங்கேற்க முடியும்? இது தொடர்பாக என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். பிசிசிஐ நிர்வாகக் குழுவின் 4-ஆவது இடைக்கால அறிக்கை மீதான விசாரணை வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என கூறியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பிசிசிஐ கூட்டங்களில் தடையை மீறி என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா பங்கேற்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் பிசிசிஐ சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகிய இருவரும் பங்கேற்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.