மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இறுதிச் சுற்றில் இந்தியா: ஹர்மன்பிரீத்துக்குக் குவியும் பாராட்டு!

இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 7 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

News image
Updated On :21 ஜூலை 2017, 7:11 am

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 7 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

90 பந்துகளில் சதமடித்தார். இதன்பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்மன்பிரீத் கெளர், கார்ட்னர் வீசிய 37-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது இந்தியா. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

இந்த ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்ததன் மூலம் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் ஹர்மன்பிரீத் கெளர். சர்வதேச அளவில் உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்தார். அதேநேரத்தில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் (காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்றில்) அதிக ரன் குவித்தவர் ஹர்மன்பிரீத் கெளர்தான்.

இதுதவிர மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 90 பந்துகளில் சதமடித்த ஹர்மன்பிரீத் கெளர், அடுத்த 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சந்தித்த கடைசி 40 பந்துகளில் அவருடைய ஸ்டிரைக்ரேட் 257.50. அவர் கடைசி 40 பந்துகளில் 6 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார். லார்ட்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

இதையடுத்து ஹர்மன்பிரீத் கெளருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. ட்விட்டரில் கிரிக்கெட் பிரபலங்கள் ஹர்மன்பிரீத் கெளரைப் பாராட்டி எழுதியதாவது: 

சச்சின்: ஹர்மன்பிரீத் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டத்தை அருமையாக முடித்துள்ளார்கள். லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு என் வாழ்த்துகள். 

அஸ்வின்: சிறப்பான பேட்டிங். முக்கியமான ஆட்டங்களுக்கான வீராங்கனை.

சேவாக்: நாட்டுக்காக இந்தப் பெண்கள் சாதித்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

கோலி: ஹர்மன்பிரீத், என்ன ஒரு அருமையான பேட்டிங்! பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பங்களித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.