இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண், உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று கொழும்புக்குப் புறப்பட்டுச் செல்கிறது. இதனையொட்டி இந்திய அணி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது.
அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:
ஒரு போட்டியில் கலந்துகொள்ளும்போது உங்கள் மனநிலை சரியாக இருக்கவேண்டும். நல்ல பயிற்சியாளர்கள் அணியில் இருக்கும்போது அது சாத்தியமாகும். அனைத்து வீரர்களிடையேயும் நல்ல மனநிலையை உருவாக்குவது என் கடமை.
பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண் 15 வருட அனுபவம் கொண்டவர். என்னை விடவும் இந்திய வீரர்களைப் பற்றி அதிகம் அறிந்தவர். கடந்த உலகக் கோப்பையின்போது நாம் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.
கடந்த இரு வாரங்களாக நான் அதிகப் பக்குவம் அடைந்துள்ளேன். கடந்தமுறை இலங்கைக்குச் சென்றபோதிலிருந்து நான் பக்குவமாகவே உள்ளேன். ரவி சாஸ்திரிகளும் கும்ப்ளேகளும் வருவார்கள், போவார்கள். இந்திய அணியின் தனித்துவம் எப்போதும்போல உயர்ந்த நிலையில் இருக்கும். அணிக்குத்தான் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும் என்றார்.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


