மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜிம்பாப்வேவுடனான தோல்வியால் உருண்ட தலை: இலங்கை அணிக்குப் புதிய கேப்டன்கள்!

இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சண்டிமலும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான கேப்டனாக..

News image
Updated On :12 ஜூலை 2017, 9:27 am

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது ஜிம்பாப்வே. இலங்கை மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைத்திருக்கிறது ஜிம்பாப்வே. கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் ஜிம்பாப்வே அணி வென்ற முதல் தொடர் இதுதான்.

இதையடுத்து இலங்கை கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் கேப்டனாக இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜிம்பாப்வேயுடனான தோல்வியை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

இலங்கை அணிக்கு 38 டெஸ்ட்டுகளிலும், 98 ஒருநாள் போட்டிகளிலும் 12 டி20 போட்டிகளிலும் மேத்யூஸ் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

இதையடுத்து இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சண்டிமலும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.