பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கல்லூரி மாணவியைக் கிண்டலடித்த சேவாக்! சமூகவலைத்தளத்தில் புதிய சர்ச்சை!

முக்கியமான பிரச்னையில் போராடும் கல்லூரி மாணவியைக் கிண்டலடித்த சேவாக்குக்கு பலர் கண்டனம்

News image
Updated On :28 பிப்ரவரி 2017, 10:54 am

தில்லி ராம்ஜாஸ் கல்லூரியில் உமர் காலித் பங்கேற்ற கருத்தரங்குக்கு எதிராக ஏபிவிபி (அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்) மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அதில் வன்முறை ஏற்பட்டது. இதற்கு தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குர்மேகர் கெளர் என்கிற மாணவி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தார்கள். இதனால் ஏபிவிபி அமைப்பினரால் அச்சுறுதலுக்கு ஆளானார் கெளர்.

குர்மேகர் கெளர், போரில் உயிரிழந்த ராணுவ வீரரின் மகள். ஏபிவிபி அமைப்பினர் அவருக்கு நெருக்கடி அளித்ததை அடுத்து, என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை. ஆனால் போர் தான் கொன்றது என்கிற வாசகத்தைக் கையில் ஏந்தியபடி உள்ள புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

Story image

இதைக் கிண்டலடிக்கும் விதமாக, நான் முச்சதம் அடிக்கவில்லை. என்னுடைய பேட் தான் அடித்தது என்று ட்வீட் செய்தார் கிரிக்கெட் வீரர் சேவாக். ஒரு முக்கியமான பிரச்னையில் போராடும் கல்லூரி மாணவியைக் கிண்டலடித்த சேவாக்குக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.