2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பெயர்க் குழப்பத்தால் ஐபிஎல் வாய்ப்பை இழந்த வீரர்!

இந்தச் செய்தி ஐபிஎல் ஏலம் தொடங்க இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானதால்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:05 am

எழில்

இரண்டு கிரிக்கெட் வீரர்கள். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே பெயர்கள். ஹர்ப்ரீத் சிங், ஹர்மீத் சிங்.

மத்திய பிரதேச ஆல்ரவுண்டர் ஹர்ப்ரீத் சிங், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தன்னை நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்கிற கனவில் இருந்தார். ஒரே காரணம் தான். சமீபத்தில் நடந்துமுடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் ஹர்ப்ரீத் சிங். 4 போட்டிகளில் 211 ரன்கள். 

அதே நாளில் ஹர்மீத் சிங் என்கிற முன்னாள் ஐபிஎல் வீரர், அந்தேரி ரயில் நிலையத்தின் அருகே கார் விபத்து காரணமாக கைது செய்யப்பட்டார். ஆனால் ஊடகங்களில் அவருடைய பெயர், ஹர்ப்ரீத் சிங் என்றே வெளியானது.

ஹர்ப்ரீத் சிங் தான் அந்த விபத்தை ஏற்படுத்தினார் என்கிற செய்தி ஐபிஎல் ஏலம் தொடங்க இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானதால் அது ஹர்ப்ரீத்தின் ஐபிஎல் வாய்ப்பைப் பாதித்துள்ளது. அன்று நடைபெற்ற ஏலத்தில் ஹர்ப்ரீத் சிங்கை எந்த ஓர் அணியும் தேர்வு செய்யவில்லை.

நான் மட்டுமல்ல, இந்த விவகாரத்தால் என் பெற்றோரும் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். ஊடகங்களில் தவறாக வெளியான செய்திகளால்தான் நான் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாமல் போனேனோ என்கிற சந்தேகமும் எனக்கு ஏற்படுகிறது. என் திறமை காரணத்தால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் தவறே செய்யாமல் அதற்குத் தண்டனை அனுபவித்திருந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டம். ஊடகங்கள் மீது எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்டான விளைவுகளுக்கு யார் பொறுப்பு? மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் எனக்கு ஆதரவாக உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்கள் என்கிறார் ஹர்ப்ரீத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.