2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புணே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நல்ல தொடக்கம்!

முதல்நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:04 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் இன்று தொடங்கியது. தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, 7-ஆவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பிடித்தார்.

ஆரம்பம் முதல் மிகவும் கவனமாக விளையாடினார் தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் பக்குவமாக விளையாடினார் வார்னர். 

15-வது ஓவரில் வார்னரை அற்புதமாக கிளின் போல்ட் செய்தார் ஜெயந்த் யாதவ். ஆனால் அது நோ பால் என்பதால் தப்பிப் பிழைத்தார் வார்னர். 

இதன்பிறகு பெரிய ஆபத்தின்றி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

அடுத்த ஓவரை உமேஷ் யாதவுக்கு வழங்கினார் கேப்டன் விராட் கோலி. அப்போது திருப்பம் ஏற்பட்டது. 38 ரன்களில் வார்னரை க்ளீன் போல்ட் செய்தார் யாதவ். ஆனால் அடுத்தப் பந்திலேயே ரென்ஷா ரிரையர் ஹர்ட் முறையில் 36 ரன்களில் மைதானத்தை விட்டு வெளியேறினார். வயிற்று வலி தொடர்புடைய உடல்நலக் குறைவால் அவர் வெளியேறியதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்மித், மார்ஷ் என புதிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை உருவானது.

முதல்நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ், ஸ்மித் ஆகிய இருவரும் தலா 1 ரன்னில் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.