திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

டி20 கிரிக்கெட்டை நான் உருவாக்கினேன்: கிறிஸ் கெயில் பெருமிதம்!

எனக்காக டி20 உருவாக்கப்பட்டது என்பதை விடவும் நான் டி20 போட்டியை உருவாக்கினேன் என்று கூறலாம்...

News image
Updated On :11 ஆகஸ்ட் 2017, 5:37 am

டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் அடித்த முதல் வீரர் கிறிஸ் கெயில். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர்தான் முதலிடத்தில் உள்ளார்.

முதல்முறையாக டி20 சதம், அதிக டி20 ரன்கள் (175*), அதிவேக அரை சதம் (யுவ்ராஜுடன் இணைந்து) என பல சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். 51 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 1537 ரன்கள் எடுத்துள்ளார். 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர்பாக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: டெஸ்ட், 50 ஓவர் போட்டிகளை மறந்துவிடுங்கள், நாம் இப்போது டி20 போட்டியில் ஈடுபடுகிறோம். எனக்காக டி20 உருவாக்கப்பட்டது என்பதை விடவும் நான் டி20 போட்டியை உருவாக்கினேன் என்று கூறலாம்.

டி20 கிரிக்கெட்டைப் படைத்தவராக மற்ற வீரர்களுக்கு நான் சொல்ல வருவது - டி20 போட்டியினாலும் ஒரு வாழ்க்கை உண்டு. பேட்டிங் வழியாக டி20 கிரிக்கெட்டில் சாதிக்கமுடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.