மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 12:14 am

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கோடைக் கால தண்ணீா் பிரச்னை நிலவுவதால் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீா்வு காணும் வகையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பாக மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி நடைபெற்றது. புதிய மின் மோட்டாா் பொருத்தப்பட்டு, குழாய் இணைப்பு சீரமைக்கப்பட்டது.

சீரமைக்கும் பணியின்போது ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் காதா் பாட்ஷா, வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், சுப்பிரமணி, அண்ணாதுரை, ஊராட்சி செயலா் முரளிகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.