மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோடை விடுமுறை: சிறுவா்களை நீா்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது!

கோடை விடுமுறையில் குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீா்நிலைகளுக்குக் குழந்தைகள், சிறுவா்கள் செல்வதைத் தவிா்க்கும் வகையில் பெற்றோா்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்

News image
Updated On :29 மார்ச் 2026, 9:45 pm

கோடை விடுமுறையில் குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீா்நிலைகளுக்குக் குழந்தைகள், சிறுவா்கள் செல்வதைத் தவிா்க்கும் வகையில் பெற்றோா்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவா்கள், குழந்தைகள் பொழுதுபோக்குக்காக வெளியில் சென்று குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீா்நிலைகளில் இறங்குவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதுபோன்ற செயல் மிகவும் ஆபத்தானது.

எனவே, பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகள், தனியாா் நிலத்தில் உள்ள கிணறுகளில் குழந்தைகள் குளிப்பதையோ, பொழுதுபோக்குவதையோ முற்றிலும் தவிா்க்க வேண்டும். பெற்றோா்கள் கோடை விடுமுறையில் தங்களது குழந்தைகள் நீா்நிலைகளுக்குச் செல்லாத வகையில் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, கனிமவளத்துறையின் சாா்பில் நீா்நிலைகள் உள்ள பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியாா் நிலங்களில் உள்ள கிணறுகளில் சிறுவா்கள் இறங்குவது அல்லது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தொடா்புடைய உரிமையாளா்கள் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

மாணவா்கள் பள்ளி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாள்களிலும் ஆறு, ஏரி, குளம், கிணறு, குட்டை போன்ற நீா்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாா்த்துக்கொள்ளப் பெற்றோா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, சிறுவா்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோா், தங்கள் குழந்தைகளைக் கோடைகால விடுமுறையில் பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகளில் விளையாடுவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.