பெங்களூர் அணி இந்த வருட ஐபிஎலில்-லில் இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 5 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற வாய்ப்புண்டா?
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் லயன்ஸ் அணி. பெங்களூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத், 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது. இந்தத் தோல்வி பெங்களூர் அணிக்குக் கடுமையான நெருக்கடியைத் தந்துள்ளது.
இந்த ஐபிஎல் போட்டியில் மும்பை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் நிச்சயம் பிளே ஆப்-புக்குத் தகுதி பெற்றுவிடும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஹைதராபாத் அணி மூன்றாவது சிறந்த அணியாக உள்ளது. எனவே அந்த அணியும் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த இடத்தில் பெங்களூர் அணி அதன் கடைசி 5 ஆட்டங்களையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போது 15 புள்ளிகள் அதன் வசம் இருக்கும். ஐபிஎல்-லில் 14 புள்ளிகளுடன் சில அணிகள் அடுத்தச் சுற்றுக்குச் சென்றுள்ளன. எனவே இதி வாய்ப்பு உருவாகலாம்.
ஆனால் இந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும் நிலைமை மிக மோசமாகிவிடும். 13 புள்ளிகளுடன் அடுத்தச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். அதற்கு மற்ற அணிகளுடன் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நிறைய ஆட்டங்களில் தோற்று பெங்களூருக்கு வழிவிடவேண்டும். அதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. எனவே இன்னும் ஒரு தோல்வி போதும். பெங்களூர் அணி மூட்டை கட்ட.
கடைசிக் கட்டத்தில் பல அதிசயங்கள் ஐபிஎல்-லில் நிகழ்ந்துள்ளன. இந்தமுறை அந்த அதிசயத்தை பெங்களூர் அணி நிகழ்த்துமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


