நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஐசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள என்.சீனிவாசனுக்கு அனுமதி மறுப்பு: உச்ச நீதிமன்றம்

இந்தியா சார்பாக ஐசிசி கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

எழில்

இந்தியா சார்பாக ஐசிசி கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகே முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது, வருவாய் பங்கீட்டில் மாற்றம், டெஸ்ட் போட்டியின் அமைப்பில் மாற்றம் என புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர ஐசிசி முன்மொழிந்துள்ளது.  இதற்கு பிசிசிஐ உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேச ஐசிசி கூட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் யாரை அனுப்புவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஐசிசியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சமீபத்தில் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் என்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களின் பொறுப்பில் இருக்க முடியாது. ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 70 வயதைக் கடந்த சீனிவாசன், நிரஞ்சன் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது பிசிசிஐ நிர்வாகக் குழு. 

இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஐசிசி கூட்டத்தில் இந்தியா சார்பாக பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் செளத்ரி கலந்துகொள்ளவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது, அவருடைய நேர்மை கேள்விக்குரியதாக உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.