ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஐசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள என்.சீனிவாசனுக்கு அனுமதி மறுப்பு: உச்ச நீதிமன்றம்

இந்தியா சார்பாக ஐசிசி கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 11:13 am

இந்தியா சார்பாக ஐசிசி கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகே முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது, வருவாய் பங்கீட்டில் மாற்றம், டெஸ்ட் போட்டியின் அமைப்பில் மாற்றம் என புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர ஐசிசி முன்மொழிந்துள்ளது.  இதற்கு பிசிசிஐ உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேச ஐசிசி கூட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் யாரை அனுப்புவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஐசிசியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சமீபத்தில் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் என்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களின் பொறுப்பில் இருக்க முடியாது. ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 70 வயதைக் கடந்த சீனிவாசன், நிரஞ்சன் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது பிசிசிஐ நிர்வாகக் குழு. 

இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஐசிசி கூட்டத்தில் இந்தியா சார்பாக பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் செளத்ரி கலந்துகொள்ளவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்துகொள்ளக்கூடாது, அவருடைய நேர்மை கேள்விக்குரியதாக உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.