தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

2016-ல் ரூ. 3 கோடி, 2021-ல் ரூ. 30 லட்சம்: சிந்துவுக்குப் பரிசுத்தொகை அறிவித்த ஆந்திர அரசு

2016-ல் ஆந்திர அரசு ரூ. 3 கோடி + அரசு வேலை வழங்கியது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:49 am

IANS

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்துவுக்கு ஆந்திர அரசு ரூ. 30 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனது 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளாா் பி.வி. சிந்து சிந்து. 

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹீ பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற 2-ஆவது இந்திய போட்டியாளா் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளாா். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிந்துவுக்கு ரூ. 30 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது ஆந்திர அரசு. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரருக்கு ரூ. 75 லட்சமும் வெள்ளி வெல்லும் வீரருக்கு ரூ. 50 லட்சமும் வெண்கலம் வெல்லும் வீரருக்கு ரூ. 30 லட்சமும் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்திருந்தது.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு சிந்துவுக்கு ஆந்திர அரசு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது. மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சாத்விக்சாய்ராஜ் மற்றும் மகளிர் ஹாக்கி வீராங்கனை  ரஜனி ஆகியோருக்கும் தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது. அப்போது, விசாகப்பட்டினத்தில் பயிற்சி மையம் அமைப்பதற்காக சிந்துவுக்கு ஆந்திர அரசு 2 ஏக்கர் நிலம் வழங்கியது. 

கடந்த முறை ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளி வென்றார். அப்போது ஆந்திர அரசு ரூ. 3 கோடி + அரசு வேலை வழங்கியது. அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிந்துவுக்குத் துணை ஆட்சியர் பதவி வழங்கினார். தெலங்கானா அரசு ரூ. 5 கோடி பரிசுத்தொகையை சிந்துவுக்கு வழங்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.