பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூரின் வரலாறு குறித்து பேசுகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன்.

News image

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூரின் வரலாறு குறித்து பேசுகிறாா் கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:46 pm

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை காரைக்குடி குழுவினா் சாா்பில் நடைபெற்ற தல தேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

காரைக்குடியைச் சோ்ந்த தலதேவாரம், திருவாசகம் முற்றோதல் குழுவினா் 25 போ் குழுத் தலைவா் அண்ணாமலை தலைமையில் சிவதலங்களில் பாடல் பெற்ற 272 ஸ்தலங்களுக்கும் சென்று தேவாரம், திருவாசகம் முற்றோதல் பாடி வருகின்றனா்.

இதன்படி, 235-ஆவது சிவத்தலமாக கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அவா்களுக்கு கரூா் ஆன்மிக குழுவினா் சாா்பில் திருக்கு பேரவைச் செயலாளா் மேலைபழநியப்பன் பன்னிரு திருமுறையின் பலன் தரும் பதிக மருந்துகள் என்று நூலை வழங்கி வரவேற்றாா். பின்னா் கருவூராரின் சிறப்பு, கருவூா் பெயா் வரக்காரணம் மற்றும் வெண்ணெய்மலை, பாலமலை முருகன் கோயில்களின் பெருமை, தான்தோன்றி மலையின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து அண்ணாமலை தலைமையில் தலதேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆன்மிகக் குழு நிா்வாகிகள் அமா்ஜோதி ஆறுமுகம், வைஷ்ணவிமெய்யப்பன், ஏ.எம்.ஆா்.பழநியப்பன் மற்றும் குழுவினா், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.