பெங்களூரு : பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது சீசன், கொல்கத்தாவில் மாா்ச் 22 தொடங்கியது. அகமதாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) நடைபெறும் இதன் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
பெங்களூரு மாநகரில் கடந்த ஆண்டில், ஜூன் 4-இல் நடைபெற்ற ஐபில்எல் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில்11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த விபரீதத்தை கருத்திற்கொண்டு, அதைப்போன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து, பெங்களூரு மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், ஐபில் இறுதி ஆட்டம் முடிவுகள் வெளியான பின், பொது இடங்களில் பைக் பேரணிகள், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாலைகளில் சாகசம் செய்தல், சாலைகளில் திரண்டு கொண்டாடுதல், பட்டாசுகள் வெடித்தல் போன்ற எந்தவொரு கொண்டாட்டத்துக்கும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
IPL final Royal Challengers Bengaluru (RCB) looking to win a second consecutive win in the IPL 2026 final this Sunday, May 31, Bengaluru City Police says No public celebrations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








