கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்விக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதன் எதிரொலியாக சிஎஸ்கே பயிற்சியும் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டது. கேப்டன் தோனி சொந்த மாநிலமான ராஞ்சிக்குத் திரும்பினாா்.
இந்நிலையில் 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன என்பதற்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ரா. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
தோனி போன்ற ஒரு வீரருக்கு ஐபிஎல் எல்லாம் அளவுகோலாக இருக்காது. ஐபிஎல் போட்டியில் தோனி ரன்கள் எடுத்திருந்தால் எல்லா நிபுணர்களும் தோனியைத் தேர்வு செய்யவேண்டும் என்பார்கள். தான் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பவேண்டுமா என்பது தோனிக்குத் தெரியும்.
அவருடைய தேர்வுக்கு ஐபிஎல் ஒரு முக்கியக் காரணமாக இருக்காது என நினைக்கிறேன். இந்திய அணியில் மீண்டும் விளையாட அவர் விருப்பப்பட்டால், அவர் விளையாடத் தயாராக இருப்பார், அவரைத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்ய நினைத்தால் தானாகத் தேர்வு செய்யப்படுவார். ஏனெனில் அனுபவம் என்பது சூப்பர் மார்க்கெட்டில் கிடையாது.
மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் தோனி. இந்திய அணிக்கு அவர் தேவைப்பட்டால், ஐபிஎல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் மீண்டும் அணிக்குள் இடம்பிடிப்பார் என்று கூறியுள்ளார்.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


